மாணவர்களின் கற்றல் நிலை மதிப்பீடு: டிஎன்எஸ்இடி செயலி மூலம் தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தல்!!
தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் நிலை மதிப்பீடு: பள்ளிக்கல்வித் துறை திட்டம்
தமிழக பள்ளிக்கல்வித் துறை 2025–26 கல்வியாண்டில் தனியார் பள்ளிகளைவிட்டு அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் கற்றல் நிலையை மதிப்பீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
தற்போது மாநிலத்திலுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில், சுமார் 52 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறை மாணவர்களின் நலனுக்காக எண்ணும்–எழுத்தும் திட்டம், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை 2025 மார்ச் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. பெற்றோர்கள் பெரும் ஆர்வத்துடன் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். இதனால் சுமார் 2 லட்சம் புதிய மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறந்ததுடன், கற்பித்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட 2 முதல் 5-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் அடிப்படை கல்வித் திறனை மதிப்பீடு செய்ய BASE LINE ASSESSMENT என்ற தேர்வு நடத்தப்பட உள்ளது.
பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகத்தினர் தெரிவித்ததாவது, இந்த மதிப்பீடு TNSED App (டிஎன்எஸ்இடி செயலி) மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments