வங்கிகளில் பராமரிக்கப்படும் சேமிப்புக் கணக்கை மாநில அரசின் சேமிப்புக் கணக்காக மாற்றம் செய்வதால் கிடைக்கும் சிறப்பு பலன்கள் தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரின் கடிதம்!!!
மாண்புமிகு நிதி அமைச்சர் 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிட்ட அறிவிப்பு:
மாண்புமிகு நிதி அமைச்சர் 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபோது கீழ்காணும் அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அதன்படி தமிழ் நாடு அரசு வங்கிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காரணமாக அரசு ஊழியர்கள் தங்களது ஊதியக் கணக்குகளை முக்கிய வங்கிகளிடம் பராமரிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு சில சலுகைகளைக் கட்டணமின்றி வழங்க முன் வந்துள்ளன அவற்றில் முக்கியமானவைகளான
அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினை வழங்கிட வங்கிகள் முன்வந்துள்ளன.
விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக தலா ரூபாய் 5 இலட்சம் வீதம் ரூபாய் 10 இலட்சம் வரை நிதியுதவி வங்கிகள் வழங்கிடும்.
விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர் கல்வி பயின்றிடும் மகளின் உயர்கல்விக்கான உதவித்தொகையாக ரூபாய் 10 இலட்சம் வரை வங்கிகள் வழங்கிடும்.
அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயில் காப்பீட்டு தொகையாக ரூபாய் 10 இலட்சம் வங்கிகள் வழங்கிடும்.
மேலும் தனிநபர் வங்கிக் கடன் வீட்டுக் கடன் கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முக்கிய வங்கிகள் முன்வந்துள்ளன.
மேலும் மேற்கூறிய வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதுடன் குறித்த காலத்தில் பயன்கள் அரசு அலுவலரின் குடும்பங்களுக்கு கிடைத்துள்ளதை தமிழக அரசின் கருவூலத்துறை ஒருங்கிணைக்கும் என அறிவித்தார்கள்.
0 Comments